வெள்ளி, 29 ஜனவரி, 2010

என் நிலைப்பாடு

இந்த நாட்டிலே எனக்கு கிடைத்த ஒரே சக்தி வாக்கு. அதை இவளவு நாள் எவ்வாறு வீணடித்தேன் ? சூப்பர் நடிகர் 1996 தேர்தலில் தோன்றி "அம்மாவுக்கு வாக்கு அளித்தால் கடவுளாலும் நம்மை காப்பாற்ற முடியாது" என்று கூறினார்.அவர் சொல்லுக்காக அய்யாவுக்கு வாக்கு அளித்தேன். 2001 தேர்தலில் அதே சூப்பர் நடிகர் "நான் இந்த கட்சிக்கு தான் ஓட்டு போடுவேன்" என்றார். சரி, அவர் கூறிய கட்சி மற்றும் அதன் கூட்டணிக்கு வாக்கு அளித்தேன். பிறகு 2006 தேர்தலில் முருங்கைக்காய் ஸ்பெஷல் நடிகர் தோன்றி "இந்த கட்சிக்கு ஓட்டு போடுங்கள் என்று கூறினார்". ஆகையால் மீண்டும் அய்யாவுக்கே வாக்கு அளித்தேன். சரி இவளவு நாள் சுயபுத்தி இல்லாமல் ஒரு "சினிமாக்காரன்" பேச்சை கேட்டு அய்யா, அம்மாவுக்கு மாறி மாறி வாக்கு அளித்ததால் அவர்களின் சொந்தம்,உறவினர்கள் Bill Gates உடன் போட்டியிட்டு உலகமகா பணக்காரர்கள் வரிசையில் இடம் பெற்று விட்டனர்.

இனி 2011 ல் தேர்தல். அதில் நிச்சயமாக வசனகர்த்தா, நடிகை, நடிகர்கள் ஆகியோருக்கு, அவர்களுடன் கூட்டணி உள்ளவர்களுக்கு என் வாக்கு இல்லை. ஆக சினிமாகாரனுக்கு,சினிமாக்காரர்கள் ஆதரிக்கும் கட்சி மற்றும் வேட்ப்பாளருக்கு இனிமேல் வாக்கு அளிப்பதில்லை. அப்படியானால் மக்கள் தொலைக்காட்சி நிறுவனருக்கா வாக்கு ? அவர் சாதியை பிடித்து தொங்கிக் கொண்டிருக்கிறார். சினிமாகாரனை விட மோசம். அப்புறம் யாருக்குத்தான் வாக்கு ? தேர்தலில் இவர்கள் கட்சி,கூட்டணி கட்சி அல்லாமல் உள்ளவர்களை ஆராய்ந்து, அவர்களில் யார் நாட்டின் மேல் சிறிதளவாவது அக்கறை காட்டுவார்கள் என பலமுறை யோசித்து ஒரு நல்லவராக, நல்ல கட்சியாக தேர்வு செய்து வாக்கு அளிக்கலாம். சரி அவர் 'மதுகோடா' போல் வில்லங்கமான ஆளா இருந்தா ? இவரிடமும் பாடத்தை கற்றுக்கொண்டு அடுத்த தேர்தல்களில் பல உத்திகளை கையாண்டு,ஆராய்ந்து ஒரு நல்ல கட்சியை, வேட்பாளரை தேர்ந்தெடுக்கலாம். எல்லாம் நம்பிக்கை.

திங்கள், 18 ஜனவரி, 2010

இந்தியன் யார் ?

மனிதன் என்றைக்குமே விலங்கு என்ற இனத்தில் இருந்து மாறப்போவதில்லை. இந்திய ஒரு சிறந்த கலாச்சாரமுள்ள நாடு என்பது பட்டிமன்றம், அரட்டை அரங்கம் போன்ற மேடைகளில் பேச்சிலும், இலக்கியங்களில் அச்சுவாகவும் தான் உள்ளது. நடை முறையில் இல்லை. சத்தியமாக இந்திய கலாச்சாரம் இந்தியாவில் இல்லை. இந்திய மக்கள் தன் அண்டை நாட்டில் உள்ள ஈழ தமிழன் உடல் சிதறி இறப்பதை கண்டு ஒரு சொட்டு கண்ணீர் கூட வடிக்காமல் வேடிக்கை பார்த்தான். இப்போது எந்த அநியாயம் தன் கண்முன் நடந்தாலும் வேடிக்கைதான் பார்க்கிறான்.

மஞ்சு நாத் என்பவர் Indian Institute of Management ல் MBA படித்துவிட்டு தன் தாய் நாட்டிற்கு உழைக்கவேண்டும் என்பதற்காக தன் நண்பர்கள் போல் அல்லாமல், வெளிநாட்டு நிறுவன வாய்ப்புகளை உதறிவிட்டு Indian Oil corporation என்ற நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். நேர்மையான அதிகாரியாக இருந்து பெட்ரோல் கலப்படங்களை தடுத்து நிறுத்தும் நல்ல செயல்களை செய்தததால் வட இந்தியாவில் மனித விலங்குகளால் சுட்டு கொல்லப்பட்டார்.

தென் இந்தியாவில் வெற்றிவேல் என்ற தமிழ் நாடு காவல் துறை உதவி ஆய்வாளர் சில மனித விலங்குகளால் வெட்டப்பட்டார். வெட்டுப்பட்டு உயிருக்கு இருபது நிமிடம் நடு ரோட்டில் போரடிக் கொண்டிருகையில், அந்த வழியில் வந்த இரண்டு தமிழ் நாடு அரசு அமைச்சர்கள், மாவட்ட கலெக்டர் ஆகியோர் வேடிக்கை தான் பார்த்தனர். இது வீடியோ எடுக்கப்பட்டு தொலைகாட்சி, இன்டர்நெட் என அணைத்து ஊடகங்களிலும் பரவி உள்ளது. தமிழக மக்கள் இதை கண்டு என்ன செய்தார்கள்?. நான் என்ன செய்தேன் ? அனைவரும் ஒரு சிறு எதிர்ப்பு கூட தெரிவிக்கவில்லை. என்ன காரணம் என்று யோசித்தால் தெரிகிறது, இந்தியர்கள் மனித விலங்குகள் மட்டு மல்ல. இவைகள் நடமாடும் முட்டாள் விலங்குகள். இந்த முட்டாள் விலங்குகளுக்கு என்று ஒரு கலாச்சாரமாம் அதுவும் மற்ற நாட்டு மனித விலங்குளை விட உயர்ந்ததாம்.கேவலம் இதற்கு அமெரிக்க, ஐரோப்ப மற்றும் அணைத்து நாட்டு கலாச்சாரங்களும், அந்தந்த நாட்டு மனித விலங்குகளும் எவளவோ மேல்.