வெள்ளி, 29 ஜனவரி, 2010

என் நிலைப்பாடு

இந்த நாட்டிலே எனக்கு கிடைத்த ஒரே சக்தி வாக்கு. அதை இவளவு நாள் எவ்வாறு வீணடித்தேன் ? சூப்பர் நடிகர் 1996 தேர்தலில் தோன்றி "அம்மாவுக்கு வாக்கு அளித்தால் கடவுளாலும் நம்மை காப்பாற்ற முடியாது" என்று கூறினார்.அவர் சொல்லுக்காக அய்யாவுக்கு வாக்கு அளித்தேன். 2001 தேர்தலில் அதே சூப்பர் நடிகர் "நான் இந்த கட்சிக்கு தான் ஓட்டு போடுவேன்" என்றார். சரி, அவர் கூறிய கட்சி மற்றும் அதன் கூட்டணிக்கு வாக்கு அளித்தேன். பிறகு 2006 தேர்தலில் முருங்கைக்காய் ஸ்பெஷல் நடிகர் தோன்றி "இந்த கட்சிக்கு ஓட்டு போடுங்கள் என்று கூறினார்". ஆகையால் மீண்டும் அய்யாவுக்கே வாக்கு அளித்தேன். சரி இவளவு நாள் சுயபுத்தி இல்லாமல் ஒரு "சினிமாக்காரன்" பேச்சை கேட்டு அய்யா, அம்மாவுக்கு மாறி மாறி வாக்கு அளித்ததால் அவர்களின் சொந்தம்,உறவினர்கள் Bill Gates உடன் போட்டியிட்டு உலகமகா பணக்காரர்கள் வரிசையில் இடம் பெற்று விட்டனர்.

இனி 2011 ல் தேர்தல். அதில் நிச்சயமாக வசனகர்த்தா, நடிகை, நடிகர்கள் ஆகியோருக்கு, அவர்களுடன் கூட்டணி உள்ளவர்களுக்கு என் வாக்கு இல்லை. ஆக சினிமாகாரனுக்கு,சினிமாக்காரர்கள் ஆதரிக்கும் கட்சி மற்றும் வேட்ப்பாளருக்கு இனிமேல் வாக்கு அளிப்பதில்லை. அப்படியானால் மக்கள் தொலைக்காட்சி நிறுவனருக்கா வாக்கு ? அவர் சாதியை பிடித்து தொங்கிக் கொண்டிருக்கிறார். சினிமாகாரனை விட மோசம். அப்புறம் யாருக்குத்தான் வாக்கு ? தேர்தலில் இவர்கள் கட்சி,கூட்டணி கட்சி அல்லாமல் உள்ளவர்களை ஆராய்ந்து, அவர்களில் யார் நாட்டின் மேல் சிறிதளவாவது அக்கறை காட்டுவார்கள் என பலமுறை யோசித்து ஒரு நல்லவராக, நல்ல கட்சியாக தேர்வு செய்து வாக்கு அளிக்கலாம். சரி அவர் 'மதுகோடா' போல் வில்லங்கமான ஆளா இருந்தா ? இவரிடமும் பாடத்தை கற்றுக்கொண்டு அடுத்த தேர்தல்களில் பல உத்திகளை கையாண்டு,ஆராய்ந்து ஒரு நல்ல கட்சியை, வேட்பாளரை தேர்ந்தெடுக்கலாம். எல்லாம் நம்பிக்கை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக